Friday, August 28, 2009

என் முதல் வணக்கம்

வணக்கம்,

என் பெயர் சுதர்ஷன் ஆனா சுதுக்குட்டினு அப்பா கூப்பிடுறது ரொம்பப்பிடிக்கும். எங்க தாத்தாவும் என்னை சுதுக்குட்டி- னுதான் கூப்பிடுவாங்க, அப்பிச்சி என்னை சுதுண்ணா-னும், எங்க அம்மாயி டேய் சுதான்-னும், எங்க அக்கா என்னை சுது-னும், எங்க சித்தி என்னை என்னடி சுதி-னும் தான் கூப்பிடுவாங்க . கதிர் சித்தப்பாதான் blog spot creat பண்ணிக் கொடுத்து blog எழுதச் சொன்னாங்க. ஆனா நான் blog spot bad spot ஆயிடக்கூடாதுனு இவ்வுளவு நாளா எழுதலை. என்னைப் பெத்தப்பா கூட என்னை ஒன்னும் சொல்லலை இந்த சித்தப்பாவாலதான் ( இவர் கூடவா ) என்னுடைய இந்த 7th birthdayல இருந்து (28.08.2009 ) black spot மன்னிக்கவும் blog spot எழுதுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ( நான் ஒரு தடவை முடிவு பன்னிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்! ஹீ ஹீ ... ).

எப்பவும் போல் இல்லாம இன்னிக்கு நேரமே எழுந்துட்டேன், ஏன்னா என்னை wish பண்ண நிறைய phone call வருமே !. எப்பவும் போல எங்க தாத்தாவும், ஆத்தாவும் wish பண்ண மறந்துட்டாங்க, வழக்கம் போல நானே phone பண்ணி வாழ்த்துக்களை வாங்கிக்கிட்டேன். என்னை wish பண்ணினவுங்க – நிம்மி அத்தை, அப்பிச்சி, அம்மாயி, சித்தி, சித்தப்பா, என் தம்பி குரு, சம்பு மாமா, விஜி அத்தை, வைஷு, லக்க்ஷனா, கதிர் சித்தப்பா, நதிக்குட்டி, பக்கத்து வீட்டு ஆஷா ஆன்ட்டி, மற்றும் ( மாயி அண்ணன், மொக்கைச்சாமி தவிர ) எங்க உறவினர்கள். ஸ்கூல்ல இருந்து வந்து cake வெட்டி, gift receive பண்ணி, நன்றி சொல்லி, கோயிலுக்குப்போயி, ஹோட்டலுக்குப் போயி, சாப்டு, வீட்டுக்கு வந்து ட்ரஸ் மாத்தி, பெட்டுக்கு வந்துட்டேன் ஹாவ் ! ஹாவ் ! ( அட கொட்டாவிங்க ) தூக்கம் தூக்கமா வருதுங்க! குட் நைட்ங்க! மறுபடியும் சந்திப்போங்க! வணக்கங்க!.